முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

ஷாமினி துவாரகன்

அழைக்கின்றேன் மகளை
கோவில் சென்று வர
கேட்கிறாள் காரணம்
எதற்கு தான் என்று…..

சூரவதை பார்க்க
சீக்கிரம் கிளம்பு
பாணக்கம் வாங்கி வர
பாத்திரமும் எடு…….

தேவர் குலம் காத்த
வேலன் புகழ் எல்லாம்
பாட்டி சொல்லக் கேட்டதுண்டு
பார்க்க வேண்டும் நேரிலதை ……

பட்டு பாவாடை உடன்
சாந்துப் பொட்டும் வைத்து
பின்னிய சடையிடை
மல்லிகைப் பூவும் வைத்து ……

சட்டென்று வந்து நின்ற
செல்லமகள் முகம் பார்த்து
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன் .

அசுரனை அழித்த
அந்தக் கதை மட்டுமல்ல
அந்நிய நாட்டிலும்
அழியாது பேணி வரும்
கலாசாரம் எண்ணி
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன்.

-ஷாமினி துவாரகன்-
12.11.2024

Nada Mohan
Author: Nada Mohan