19
May
செல்வி நித்தியானந்தன்
முயற்சியே பலம்
முனைப்பே திடம்
மானிட பிறப்பின்
மகத்தான பலமே
மனஉறுதி என்றுமே
திடமான முனைப்பே
முயற்சியின் பயனே
முற்றிலும்...
14
May
குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
ஷாமினி துவாரகன்
அழைக்கின்றேன் மகளை
கோவில் சென்று வர
கேட்கிறாள் காரணம்
எதற்கு தான் என்று…..
சூரவதை பார்க்க
சீக்கிரம் கிளம்பு
பாணக்கம் வாங்கி வர
பாத்திரமும் எடு…….
தேவர் குலம் காத்த
வேலன் புகழ் எல்லாம்
பாட்டி சொல்லக் கேட்டதுண்டு
பார்க்க வேண்டும் நேரிலதை ……
பட்டு பாவாடை உடன்
சாந்துப் பொட்டும் வைத்து
பின்னிய சடையிடை
மல்லிகைப் பூவும் வைத்து ……
சட்டென்று வந்து நின்ற
செல்லமகள் முகம் பார்த்து
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன் .
அசுரனை அழித்த
அந்தக் கதை மட்டுமல்ல
அந்நிய நாட்டிலும்
அழியாது பேணி வரும்
கலாசாரம் எண்ணி
பூரித்துப் போகிறேன்
இறுமாப்புக் கொள்கிறேன்.
-ஷாமினி துவாரகன்-
12.11.2024
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...