வசந்தா ஜெகதீசன்

இலக்கு…..
வாழ்வின் சிறகு விரிந்திடும்
இலக்கின் கதவு திறந்திடும்
உயர்வின் எண்ணம் பரந்திடும்
உலகே வானாய் வசப்படும்

அகத்தின் பிடிக்குள் கனவுகள்
ஆயிரம் எண்ணத்தின் பதிவுகள்
ஆழமாய் உழுதிடும் வயலிலே
ஆணி வேரிடும் விளைபயிரே

இலக்காய் மிளிரும் குறிக்கோளே
இலட்சியம் நிறைக்கும் வாழ்வரணாய்
இலக்கற்ற படகுகள் திசையறியா
இலக்கின் அம்புகள் குறிசுட்டும்
இலட்சிய வேட்கையில் முதற்படியாய்
இயல்பில் ஒன்றும் இலக்கின் வழி.
மிக்க நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading