28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவதர்சனி
வியாழன் கவி 1564!!
உழைப்பின் வெகுமதி!
ஏர் பின்னது உலகு என்றானது
ஏரதை மறந்து மண்ணானது
மண்ணுக்குள் விளைச்சல் கொண்டானது
மனிதன் உழைப்பு மறந்ததனால்
பசி பட்டிணி மரணம் என்றானது!
கல்வியில்லா மனிதனிடம் கருணை கொண்டாடுது
கற்ற மனிதனால் சுய நலம் தலைதூக்குது
மனம் திண்டாடுது மகிழ்வு தடுமாறுது
நோய் தொற்று வென்றாடுது!!
உழைப்பைப் போற்றிய காலம்
ஊரும் உலகும் வாழ்வாங்கு வாழ்ந்தது
உழைப்பை மதியாது மிதித்த போது
உணர்வு துன்பப்பட்டே மதியிழந்து போகுது!
தை மகளை வரவேற்று அன்று
தைத்திரு நாள் உதித்துக்கொண்டது
உழவன் உழைப்பைப் போற்றி
உலகம் தலை சாய்த்தது!!
உழவை மறந்து கனவில் மிதந்து
கணினி யுகத்தில் வீழ்ந்த மனிதன்
பசியை ஆற்றப் பலதை ஆக்க
விஞ்ஞானம் கற்றுக் கொடுத்தது
செயற்கை அழிவைத் தந்து போகுது!
சிவதர்சனி இராகவன்
13/1/2022
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...