” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பொங்கட்டும் பொங்கட்டும் “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 13.01.2022

கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றிகூற
உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்த
திங்களாம் தை திருப்புமுனையாக
திக்கெட்டும் பொங்கல் திறனாய் பொங்க
மங்கலம் பொங்க மனைமாட்சி பொங்க
உள்ளம் பொங்க உவகை பொங்க
உணர்வுகளும் பொங்கியெழ
பொங்கு தமிழாக பொங்கட்டும் பொங்கல் !

எண்ணங்கள் ஈடேற ஏற்றங்கள் அரங்கேற
புன்னகை மலர்கள் பூத்துக் குலுங்க
பூங்காற்று தவழ்ந்து வர
பொங்கட்டும் பொங்கட்டும்
புதுமைகள் பொங்கட்டும்
மலரட்டும் மலரட்டும்
மாற்றங்கள் மலரட்டும் !

பிறந்திருக்கும் தை சுகத்தை வளத்தை தந்து
பீடைகளை ஒழித்து நம்பிக்கை வழி காட்டி
தடைகள் விலகி தன்னம்பிக்கை ௐளிர
தித்திக்கும் பொங்கல் தேனாய் இனிக்கட்டும்
அகமும்முகமும் பொலியட்டும் ஆனந்தமும் பொங்கட்டும்
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் !

Nada Mohan
Author: Nada Mohan