நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

Jeyam

பாமுகப் பூக்கள் 

பாவலர் ஈர்ப்பதால் உருவாகி 

பாமுகப் பூக்களாய் வெளியாகி 

பார்வலம் வந்ததந்த நிகழ்ச்சி 

ஆர்வலர்கள் ஆர்பரித்தே மகிழ்ச்சி

கற்றவரின் பாராட்டுக்கள் குவிந்ததினம் 

உற்சாகத்தை உற்பத்திசெய்தது கவிஞர் மனம்

தொல்தமிழின் அற்புதத்தை அங்குகண்டேன்

சொல்லமிழ்தை செவிகொண்டே உண்டேன் 

பா.வை.ஜெ இன் அழகானதொரு பாணிநடை

பாவை ஆக்குவோர்க்கது பெருங்கொடை

பாமுகப்பூக்களாம் இந்த வெளியீடு

காவியதே காவியத்தை மொழியோடு. 

ஜெயம்

17-01-2022

Nada Mohan
Author: Nada Mohan