மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அபிராம கவிதாசன் .

கவி இலக்கம் -162. 20.01.2022
கவித் தலைப்பு !

“ கொண்டாட்டக் கோலங்கள் “

கொண்டாட்ட கோலங்கள்
கொரோனாவை மறந்தன
வண்டாட்டம் பறந்தன
வண்ண வண்ண நிகழ்வுகள் !

புத்தாண்டு கொண்டாட்டம்
புதுபுது வண்ணத்தில்
மத்தாப்பு புன்னகை
மல்லிகையாய் மலர்ந்தன !

இல்லத்தில் கொண்டாட்டம்
இனித்தன உள்ளத்தில்
செல்லக் குறும்புடன்
சென்றன கொண்டாட்டம்!

வண்ணவண்ண கோலங்களாய்
வாழ்க்கை மலர்ந்திட
திண்ணமாய் போராட்டம்
தித்திப்பாய் மலரட்டும் !

திண்டாட்ட தேரோட்டம்
திசையறியா பறந்தன
மண்டாடும் உள்ளங்கள்
மனத்திடம் கொண்டன !

இயற்கையை கொண்டாடும்
இலைதளை காய்களுடன்
செயற்கை நட்புறவால்
சங்கமித்தே மகிழ்ந்தன !

இலக்கிய படைப்புடன்
இதயங்கள் பேசின
வலக்கரம் இடக்கரம்
வில்லம்பாய் இணைந்தன !

இளமை முதலாய்
இணையாய் முதுமையும்
களத்தில் இறங்கி
கனிந்து மகிழ்ந்தன !

பண்டிகை கொண்டாட்டம்
பற்பல் படைப்புடன்
வண்டிமாடு மஞ்சுவிரட்டி
வகைவகையாய் கொண்டாட்டம்!

வண்ண வண்ணகோலத்தில்
வரைந்த எண்ணங்கள்
கண்ணிரண்டும் பறித்தது
களிப்புடன் கொண்டாட்டம்!

நன்றி🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading