இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

அபிராம கவிதாசன் .

கவி இலக்கம் -162. 20.01.2022
கவித் தலைப்பு !

“ கொண்டாட்டக் கோலங்கள் “

கொண்டாட்ட கோலங்கள்
கொரோனாவை மறந்தன
வண்டாட்டம் பறந்தன
வண்ண வண்ண நிகழ்வுகள் !

புத்தாண்டு கொண்டாட்டம்
புதுபுது வண்ணத்தில்
மத்தாப்பு புன்னகை
மல்லிகையாய் மலர்ந்தன !

இல்லத்தில் கொண்டாட்டம்
இனித்தன உள்ளத்தில்
செல்லக் குறும்புடன்
சென்றன கொண்டாட்டம்!

வண்ணவண்ண கோலங்களாய்
வாழ்க்கை மலர்ந்திட
திண்ணமாய் போராட்டம்
தித்திப்பாய் மலரட்டும் !

திண்டாட்ட தேரோட்டம்
திசையறியா பறந்தன
மண்டாடும் உள்ளங்கள்
மனத்திடம் கொண்டன !

இயற்கையை கொண்டாடும்
இலைதளை காய்களுடன்
செயற்கை நட்புறவால்
சங்கமித்தே மகிழ்ந்தன !

இலக்கிய படைப்புடன்
இதயங்கள் பேசின
வலக்கரம் இடக்கரம்
வில்லம்பாய் இணைந்தன !

இளமை முதலாய்
இணையாய் முதுமையும்
களத்தில் இறங்கி
கனிந்து மகிழ்ந்தன !

பண்டிகை கொண்டாட்டம்
பற்பல் படைப்புடன்
வண்டிமாடு மஞ்சுவிரட்டி
வகைவகையாய் கொண்டாட்டம்!

வண்ண வண்ணகோலத்தில்
வரைந்த எண்ணங்கள்
கண்ணிரண்டும் பறித்தது
களிப்புடன் கொண்டாட்டம்!

நன்றி🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading