பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஒளவை

பரவசம்
=======
மயங்கும் மாலை மனதை வருட
பயங்கள் மறந்த பதமான பொழுது
இயற்கை அழகில் இதயம் மிதக்க
சயனம் தாலாட்ட சந்தோச பரவசம்

முழுநிலா வானில் மெய்மறந்த வேளை
பழுதில்லா நிலவைப் பார்த்து இரசிக்கையில்
தொழுகின்ற கடவுளாய்த் தோன்றும் உருவுடன்
அழுவதும் சிரிப்பதும் ஆனந்த பரவசம்

தென்றல் காற்று தேகம் தீண்ட
இன்ப ஊற்று இதமாய்த் தூண்ட
அன்பு உள்ளம் அருகில் இருக்க
தன்னை மறந்து தங்கும் பரவசம்

அலைகள் கரையை அடித்துச் செல்ல
நிலைத்த கால்கள் நீரினில் புதைய
கனத்த சுமைகள் கரைந்து போக
மனது மகிழ்ந்து மிதக்கும் பரவசம்

அருவியின் ஓசையும் அழகிய வீழ்ச்சியும்
குருவிகள் இன்பமாய்க் குலவிடும் காட்சியும்
உருகிய உள்ளத்தில் உறைகின்ற வேளையில்
தருகின்ற பரவசம் தன்னிலை மறக்குமே.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading