நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

Vajeetha Mohamed

பரவசம்

சாரல்களாய் நனைந்த
அன்பு
கு௫விப் பட்டாளமாய்
குவிந்த ௨றவு

என்சுற்றத்தை எண்ணி
கர்வம் கொண்டேன்
அந்த ஏழு கிழமையில்
என்னை வ௫டிச்சென்ற
பரவசம் ஆயிரம்மாயிரம்

தடுமாறிய பிரிவு
௨யிர்கொள்ளும் பதிவு
அசட்டுச் சிரிப்போடு
தி௫டிய நினைவுகளோடு

பிரியாதபிரியாவிடையில்
பரவசம் கொண்டேன்

ஆடித் திரிந்த எண்ணங்கள்
பாய்ந்து ஓடிய நினைவுகள்
பாலாய்போன மனசு
மூச்சில் ௨ணர்வில் ௨யிரில்
நினைவில் கலந்து
பரவசம் கொள்கின்றதே
தாய்மண் நினைவோடு

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan