இராசையா கௌரிபாலா

பரவசம்
————

பழகிப் பார்க்கப் பருவங்கள் பரவசம்
சுழலும் பூமிதனில் சுற்றிடப் பரவசம்
நிழலும் தொடருதே நிசத்தின் பரவசம்
மழலை மொழியில் மயங்கிடும் பரவசம்

பூக்கள் எல்லாம் புலர்ந்திடப் பரவசம்
ஏக்கம் தொலைந்த இரவும் பரவசம்
ஆக்கம் ஊக்கம் அளித்திடும் பரவசம்
பாக்கள் இனித்திடும் புரிதலில் பரவசம்

எல்லாம் பரவசம் எதிலும் பரவசம்
நல்லவராய் அவனியில் நாளும் பரவசம்
வல்லமை தந்து வானுயரப் பரவசம்
இல்லாப் பிறப்பை இனிதாக்கும் பரவசமே.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading