நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

கிராமத்து பெண்களின் முன்னேற்றம்

பெண் முன்னேற்றம் வேண்டி
சங்கம்,பேரவை அமைத்தனர்.
இன்னும் முன்னேறவில்லை
ஏனெனில் கிராமத்து பெண்கள்.

நகர்ப்பகுதியில் உண்டு
முன்னேற்றம்
கிராமத்தில் ஆணுக்குப் பின்தான்
பெண்கள் இருக்கின்றார்.

நகரங்களில் இன்றைய
காலத்தில்
ஆணுக்குப் பெண் நிகராக
கல்வியில்,வேலையில் இருக்கின்றார்கள்.

பின் தங்கிய இடங்களிலே
பெண்களை வெளியில் விடமாட்டார்
இப்பொழுது தான் சிறிது சிறிதாக
கல்வி கற்று முன்னேறுகின்றார்.

கிராமத்து பெண்கள்
பயந்தவர்கள்.
நகரத்துப் பெண்கள்
துணிச்சல் உள்ளவர்.
எதையும் சமாளிப்பார்கள்.
இனிவரும் காலங்களில்
கிராமத்து பெண்கள்
துணிந்து செயல்படலாம்
கல்வியில் மேம்படலாம்
என்றால் தான் உங்கள்
முன்னேற்றம் உலகறியும்

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan