நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

பச்சைக் குவளை
கதிரவன் ஒளியால் பச்சையம் பெறுவாள்
மழையின் துளியால்
துளித்துச் சிரிப்பாள்
பனியின் பொழிவில்
பூத்துச் சிரிப்பாள்
குளிரின் கொடுமையில்
மரத்து நிற்பாள்
இலை உதிர்காலம்
பழுத்தே விழுவாள்
கள்ளை ஏந்த
பிளாவாய் மடிவாள்
பந்தியில் குந்த
தலை விரிப்பாள்
பீப்பி ஊத
குழாய்ச் சுருள்வாள்
கோவில் விழாவில்
தொங்கி நிற்பாள்
இட்டலிச் சட்டியில்
வட்டமாய் இருப்பாள்
வீட்டு வேலியை
பின்னலால் மறைப்பாள்
பொங்கல் பானையில்
இடையாய் இருப்பாள்
பூரண கும்பத்தில்
மங்களமாய் இதழ் விரிப்பாள்

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan