மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கமலா ஜெயபாலன்

கவிஞனின் ஆயுதம்
——————————
பாரினில் பாவலர்
பாடிய பாடல்கள்
வேரினும் ஆழமாய்
வேகமாய் ஊன்றும்
காரிருள் ஆனாலும்
கவிஞனின் எழுதுகோல்
கூரிய முனையால்
கீறிடும் வலிமையாய்/

செந்தழிழ் கொண்டு
செதுக்கிய ஆயுதம்
சந்துகள் ஓடிச்
சரித்திரம் படைக்க
எந்தனை ஆளும்
இன்பத் தழிழை
வந்தனை செய்துமே
வாழ்த்தி வரைவோம்/

பாரதியரும் பரதிதாசனும்
பதமாய் எழுதியே
வீரகாவியம் படைத்த
விந்தையும் கண்டோம்
தீரமன சிந்தனையோடு
தந்திடும் கருத்தும்
காரமாகி உரைத்துடும்
கருத்தை உணர்வாய்/

எண்ணத்தை எழுத்தாக்கி
இதையத்தை கல்லாக்கி
வண்ணத்தை வரிகளாக்கி
வார்த்தைகளை தீயாகி
விண்ணுலகம் போற்றும்
வீரனின் எழுதகோல்
கண்ணிற்குள் மணியாய்
காக்குமே கவிஞரை/

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading