05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 161
தலைப்பு — காசுக்காய் உண்மை கரைகிறது
நீர்மையாய் நிலவாய் நிலவிய நேர்மை
தேர்வின்றித் தனித்து தாழ்வுற்றுச் சோர்கிறது
நீர்க்குமிழி வாழ்விதென்று நினைக்காத நெஞ்சங்களின்
நாரற்ற செயல்களால் நேர்மை தள்ளாடுது.
உண்மை உரைத்ததால் உயர்ந்தான் அரிச்சந்திரன்
என்பதை அறிந்தோரும் அழுக்குப்பொய் பேசுகின்றார்
கண்முன்னே உண்மையை காசுக்காய் மறைப்பவரால்
கண்ணீரில் வீழ்ந்து உண்மை கரைகிறது.
நம்பிக்கைச் சக்கரத்தில் நாடுநகர் நகருகையில்
எம்மவரை நம்பவைத்து ஏமாற்றிப் பொருள்
சம்பாதிப்போர் செயலாலே நம்பிக்கை இருப்பிழந்து
கும்மிருட்டில் புகுந்து விம்பத்தை இழக்கிறது.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
08/02/2022
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...