மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலா சிவநாதன்

மூங்கில்

புல்லின் இனமே மூங்கில்
புனிதம் ஆன நல்மரமே
வில்லாய் வளைத்தால் வளையும்
விரும்பி ஊத இசையாகும்
புல்லாங் குழலாய் நீயும்
புரிந்து பிறக்கும் நல்லோசை

நாற்பது அடியே வளர்வாய்
நான்கு திசையும் மிளிர்வாயே
ஊற்றாய் நீரை உறிஞ்சி
உணவாய்க் கமிழும் உலகினிலே
நாற்றாய் வளரும் திறனால்
நன்கு விளையும் விண்ணுயர!

பண்டா உண்ணும் உணவாய்
பரிந்து நிற்பாய் மண்ணின்மேல்
கண்டால் அழகுப் பச்சை
களிப்பாய் நிலைப்பாய் மிகுகாலம்
உண்டால் மருந்தாய் நிற்பாய்
உலகின் உயரம் நீயன்றோ!
தண்டால் அரும்பும் ஓசை
தளிர்த்துத் துளிர்க்கும் மரமேநீ!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading