பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இராசையா கௌரிபாலா

காலத்தில் நிலைக்கும் அன்பு
******************************
காலங்கள் கடந்தும் காத்திருப்பு அன்புடனே
ஞாலத்தில் நாமிருவர் நட்புடன் காதலித்து
பாலம் அமைத்தோம் பலகாலக் கனவுடன்
கோலம் மாறினும் கோட்பாடு ஒன்றே

எந்தன் உயிராய் என்னுள் வந்தாயே
உந்தன் துணையாய் உயிரையும் தாண்டி
முந்திச் செல்லும் மூப்பையும் எதிர்கொண்டு
எந்நாளும் நினைப்புடன் என்வாழ்வு நகருதே

அன்பான வார்த்தைகள் அசராத நிசத்துடன்
துன்பமாய் ஊடல் துவண்டே போனது
என்பால் அன்றி எமதான காலத்தை
முன்சென்று வாழ்வதே முழுமைக் காதல்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading