பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ விடியலின் உன்னதம் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 03.03.2022

விண்ணின் வேந்தன் வெய்யோன்
வைகறைப் பொழுதினில் வானத்தைக் கிழித்து
வண்ணமாய் பொற்கதிர்களை விரித்து
கங்குல் விலக்கி காசினியில் ஒளியினைப் பரப்பி
பொழுது புலர புன்னகை தவழ
பூக்கள் மலர பனித்துளி விலக
பட்சிகள் பாட பாட்டாளிகள் மகிழ
நித்தமுமாய் விடியலைத் தருகிறான் உன்னதமாய் !

தியாகத்தின் அர்ப்பணிப்பில் தன்மான உணர்வில்
உயிர்களின் இழப்பில் உருவாகுமே உன்னத விடியல்
விடியலின் உன்னதம் விழிகளுக்கு மலர்வனம்
விடியலின் உன்னதத்தைக் காண
விழிகளும் இங்கு ஏங்கித் துடிக்கிறதே !

அண்டை நாடொன்று இங்கு போரினால் தவிக்க
உலக நாடுகள் எல்லாம் போரை எதிர்க்க
பொருளாதாரத் தடைகளையும் விதித்து நிற்க
நேசநாட்டைக் கைப்பற்ற துடிக்கிறது வல்லரசு
தாய்நாட்டைக் காக்க போராடுகின்றனர் மக்கள்
நேட்டோ நாடுகள் கொடுக்குமா நேசக்கரம் ?
உன்னத விடியல் தான் கிடைக்குமா ?
விடியட்டும் விடியல் பிறக்கட்டும் உதயம் !

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading