செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

தமிழ்த்தாய் வணக்கம்
“””””””””””””””””””

தமிழவள் தமிழரில்
தங்கிடும் உயிரவள்
தமிழனை தகைவுறத்
தழைத்திடச் செய்பவள்
தகித்திடும் நெருப்பினும்
தகதகத் திருப்பவள்
அகிலமே அவளது
அழகினில் மயங்கிடும்
பிழைத்திடும் வழக்கினைப்
பிறப்பிலே அழிப்பவள்
அழைத்திடும் அடியவர்
அருகினில் தவழ்பவள்
முதல்மொழி அவளென
முடிபுனை தகைமையள்
இதமுற தரணியில்
இயங்கிடும் இனியவள்
பதமலர் பணிந்திடப்
பரவசம் அடைபவள்
நிதமெனை அணைப்பவள்
நிழலென தொடர்பவள்
தலைநிமிர் தமிழனாய்
தரத்தினை அருள்பவள்
நிலைபெறு அழகினால்
நிலவிடும் அமுதவள்
களம்பல படைத்திடும்
கவிகளின் குலமகள்
பழம்பல பனுவலில்
பரவிடும் பசுமையள்
அணிகளை அணிந்துமே
அவனியில் உலவிட
அனைவரும் அடிபணிந்
தவளடி தொழுவமே!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading