பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

மண்ணில் மாந்தரின் மாண்பு
ஒரு விகற்ப இன்னிசை அளவியல் வெண்பா

மண்ணிலே மாந்தரின் மாண்பு மகத்துவம்
பண்பு நிறைந்த பெருமைகள் சொல்லிடும்
கண்ணினைப் போலவே காத்திடுவார் மாண்பையும்
புண்ணியம் என்றே புகழ்ந்து

புகழ்ந்து வளர்த்திடுவார் பூமியில் பதிக்க
நிகராய்த் தரத்தினில் நீணிலம் காணாப்
புகழும் அறமும் பெரும்பேறாய்ப் பெறவும்
அகத்தில் குளிர்ந்துடும் அன்பு.

அன்பிலே மூழ்கி அகில மதிலேயும்
துன்பம் துரத்த துவண்டாலும் வாழ்விலே
நன்மையும் செய்திடவும் நானிலம் ஓங்கிட
நன்றேயும் செய்திடுவார் நிதம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading