04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
நகுலா சிவநாதன்
சந்தம் சிந்து கவி
முடியும்
முடியும் எண்ணம் உன்னுள்
முளைக்க வேண்டும் விதையாக!
விடியும் பொழுது வானம்
விரட்டும் இருளைத் தானாக!
வடியும் தண்ணீர் வளத்தை
வழங்கச் செல்லும் நிலமீது!
படியும் சிந்தை தானே
படைக்கும் வாழ்வை உரமாக!
அண்டப் புகழைப் பெற்றே
ஆளும் உற்ற உயர்திறனே!
உண்ட உணவு செரிக்கும்
உழைப்பால் என்றே உயர்ந்திடுக!
கண்டம் விரியும் கடலே
காக்கும் அரணாம் உணர்ந்திடுக
தொண்டு செய்யும் மதியே
தொடர்ந்தே ஓங்கும் புவிமேலே!
பொழியும் மழையே நிறைக!
பொழிலே அழகாய்ப் பூத்திடுக!
கழியும் காலம் களிப்பாய்க்
கவரும் வண்ணப் பேராற்றல்
அழியும் தீமை அகன்றே!
அணைக்கும் உள்ளம் ஆறுதலாய்!
சுழிபோல் துன்பம் சூழ்ந்தாலும்
சுகமாய் வாழத் தலைப்படுவோம்!
நகுலா சிவநாதன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...