மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பணி
————
பணிக்குப் பணி பரவசம் அடைவாய்
மணியாய் வாழ்வில் மகத்துவம் பெறுவாய்
அன்புக்குக் குனி அகிலத்தை ஆழ்வாய்
இன்பம் இதனால் இருப்பிடம் ஆகும்

காரியம் யாவும் கருத்தொரு மித்தே
வீரயம் கொண்டு விரும்பிச் செய்து
பாரினில் மக்கள் பரவசம் அடைய
கூரய அன்புடன் குணமுடன் வாழ்வாய்

பண்பும் பணிவும் பாட்டன் சொத்து
கண்ணில் வைத்துக் காப்போம் நாமும்
மண்ணில் வாழ்தல் மகத்துவம் ஆனால்
புண்படும் செயல்கள் புரியாது வாழ்வாய்

மனிதம் வேண்டும் மானிடர் வாழ்வில்
புனிதனாய் உலகில் புரிதல் கொண்டு
சொல்லும் செயலும் சுத்தம் ஆக்கியே
வெல்லுவாய் அகிலம் விண்ணிலும் உயர்வாய்/

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading