பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

திருமதி.சக.தெய்வேந்திரமூர்த்தி

எழுசீர் விருத்தம்
மா மா மா மா
மா மா காய்

இளையோர் கடமை
“”””””””””””””””””””
இளையோர் வாழ்வில் இருக்கும் தடைகள்
இயக்கம் கூட்டும் படிக்கல்லாம்
விளைவைப் பார்க்கா விரையும் தன்மை
விழுந்தால் எழுதற் குதவிடுமாம்
களைகள் கண்டால் கவனம் வேண்டும்
கருத்தாய் அவற்றை அகற்றிடலாம்
தளைகள் போடும் தக்கோர் வார்த்தை
தலைமேற் கொண்டு வாழ்ந்திடவே!

துடுக்குத் தனத்தைத் தூரத் தள்ளித்
துயர வாழ்வைப் பகிர்ந்திடலாம்
அடுக்கு வார்த்தை அன்பைக் காட்டா(து)
அணைத்து வார்த்தை யாடிடலாம்
தடுக்கத் தடுக்கத் தயங்கா துழைத்தால்
தலைமைப் பதவி பெற்றிடலாம்
கெடுக்கும் மாந்தர் கேள்விக் கணைகள்
கேடே உனக்கும் அறிவாயே!

பட்டம் பதவி பாரில் வேண்டும்
படித்துப் பயமில் லறிவோடு
சட்டந் தெரிந்து சபலம் இல்லா
சாந்த வாழ்வும் துணைக்கொண்டு
தட்டிக் கேட்கும் தகைமை கொள்வாய்
தவமாம் அன்பைப் போற்றிநிதம்
திட்டந் தீட்டு திகழும் உலகம்
தெரியு முன்றன் கண்முன்னே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading