அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பட்டினி

இயற்கையுடன் இணைந்த இதமான வாழ்வு
செயற்கையும் இல்லை சீற்றமும் இல்லை
உயர்ந்த நோக்கம் உன்னத உழைப்பு
நோயற்ற வாழ்வு நோகாத மனங்கள்

கட்டுடல் காக்கும் கமக்காரன் தொழிலும்
பட்டினி போக்கி பசியை நீக்கிடும்
வெட்டிப் பேச்சும் வீண்விவாத முமேவாழ்வில்
கிட்டவும் வாராது குரோதமும் கிடையாது

முட்டி மோதுவதும் முரண்பாடு காட்டுவதும்
கட்டுக் கோப்பும் குலைந்தகடு கதிவாழ்வும்
பட்டினிச் சாவும் பெருகுது பாரில்…..

கோசலா ஞானம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading