பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவிஞன்

சின்னச்சின்ன அழகைக்கூட அவன் விழிகள் உள்வாங்கிவிட மறக்காது
தன் சிந்தனையை விரித்து சத்தான வார்த்தைகளை பொறுக்கி கிறுக்கி வரிகளாக்கிவிடுவான்
சொல் வித்தைக்காரன் தன் வார்த்தை விளையாட்டால் மனங்களை தன் இஸ்டத்திற்கு வசப்படுத்திவிடுவான்
தனிமை உலகுள் சஞ்சரித்து பல இனிமைத் கவிதைகளை சுகமாக பிரசவித்தும் விடுவான்

சமுதாயப் பழுதுகளை இவன் எழுதுகோல் உழுதுவிடும்
தன் தாய்மொழியை உயிராய் நேசிப்பவன் சுவாசிப்பவன் பூசிப்பவன் இவன்
வளைந்துகொடுக்காது நிமிர்ந்துநின்று வாய்மையை உச்சரிப்பவன்
தன் உணர்வுகளை மறைக்காது நன்கு உறைக்கவே உரக்கவே உரைப்பவன்

எவரும் காணமுடியாத அறியாவுலகை தன் கற்பனைகொண்டு கண்முன்னே படைப்பான் இவன்
என்றும் வாழும் வார்த்தைகள் தந்து நிரந்தரமானவன் என்றுமே அழியாதவன்
பகுத்தறிவை பறைசாற்றுவான் சமகாலங்களுள் ஆர்ப்பரிப்பான்
அழகான பொய் சொல்லிடினும்
மெய்களையும் ஒளிக்காது காட்சிப்படுத்துபவன்
சொற்களை செதுக்கிக்கோர்த்து சந்தங்களால் மொழியை அமுதாக்கும் கவிஞன் நல்ல கலைஞன்

ஜெயம்
18-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading