பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

குட்டிப் பெண்
————————
கூடைநிறையப் பழம்வைத்து
கொண்டாடும் குட்டிமானே/
சாடையாக மழைபொழியும்
சாயலும் உண்டெல்லோ/
ஔவைக்கு கனிகொடுத்தான்
அதிகமானும் அன்று/
பாவைநீயும் பண்புடனே
பழங்கொடுக்கும் பாங்கை/
பார்போற்றும் பார்மகளே
பத்திரமாய் வீடுசெல்வாய்/
கூர்கொண்ட உன்புத்தி
குலங்காக்கும் உண்மையது/
நன்றியுள்ள நாய்யுனக்கு
நண்பனா போதுமே/
வென்றிடுவாய் உலகத்தை
வீரமுள்ள பெண்ணாய்/

குட்டிப் பெண்
————————
கூடைநிறையப் பழம்வைத்து
கொண்டாடும் குட்டிமானே/
சாடையாக மழைபொழியும்
சாயலும் உண்டெல்லோ/
ஔவைக்கு கனிகொடுத்தான்
அதிகமானும் அன்று/
பாவைநீயும் பண்புடனே
பழங்கொடுக்கும் பாங்கை/
பார்போற்றும் பார்மகளே
பத்திரமாய் வீடுசெல்வாய்/
கூர்கொண்ட உன்புத்தி
குலங்காக்கும் உண்மையது/
நன்றியுள்ள நாய்யுனக்கு
நண்பனா போதுமே/
வென்றிடுவாய் உலகத்தை
வீரமுள்ள பெண்ணாய்/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading