நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நேவிஸ்பிலிப்

வியாழன் கவிதை (58). 28/04/22
வேண்டும் வலிமை
வலிய வந்த வலிகளோடு
வருந்தி வாடும் மானிடரே
வலியே வாழ்க்கையென
மனமுடைந்து போகாதீர்

உணர்வற்றுக் கிடப்பது உடலேயன்றி
உள்ளுணர்வில்லை தெளிவீர்
குருதி உம்மில் உறைந்தாலும்
உறுதி என்றும் நிலைத்திருக்க

குன்றி விடா மனோபலமும்
குன்றா வலிமையும் கொண்டு
தெளிவான பாதையிலே
பயணங்கள் இனிதாகட்டும்

அவதிப் படும் நெஞ்சுக்கு ஆறுதலாய்
நிம்மதி இழந்த கண்ணுக்கு நித்திரையாய்
சிறகிழந்த பறவைக்கு ஆகாயமாய்
இருக்குது வலிமை மறந்திடாதீர்.

காலம் கை கூடும் வலிமை இருப்பின்
கவலைகள் எங்கோ மறைந்தோடும்
தோல்விகள் படியாகி ,வெற்றிகள் குறியாக
வேண்டும் வலிமை என்றும் வேண்டும் மன வலிமை.
.

Nada Mohan
Author: Nada Mohan