சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நேவிஸ்பிலிப்

வியாழன் கவிதை (58). 28/04/22
வேண்டும் வலிமை
வலிய வந்த வலிகளோடு
வருந்தி வாடும் மானிடரே
வலியே வாழ்க்கையென
மனமுடைந்து போகாதீர்

உணர்வற்றுக் கிடப்பது உடலேயன்றி
உள்ளுணர்வில்லை தெளிவீர்
குருதி உம்மில் உறைந்தாலும்
உறுதி என்றும் நிலைத்திருக்க

குன்றி விடா மனோபலமும்
குன்றா வலிமையும் கொண்டு
தெளிவான பாதையிலே
பயணங்கள் இனிதாகட்டும்

அவதிப் படும் நெஞ்சுக்கு ஆறுதலாய்
நிம்மதி இழந்த கண்ணுக்கு நித்திரையாய்
சிறகிழந்த பறவைக்கு ஆகாயமாய்
இருக்குது வலிமை மறந்திடாதீர்.

காலம் கை கூடும் வலிமை இருப்பின்
கவலைகள் எங்கோ மறைந்தோடும்
தோல்விகள் படியாகி ,வெற்றிகள் குறியாக
வேண்டும் வலிமை என்றும் வேண்டும் மன வலிமை.
.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading