பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ வேண்டும் வலிமை “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 28.04.2022

வலிமையே வாழ்விற்கு உரம்
உடல்வலுவும் உளவலுவும்
ஒருங்கு சேர உண்டாகுமே வலிமை
வளமான வாழ்வினை உரமாக்க
சிறப்புக் குழந்தைகளைப் பொறுப்போடு வளர்க்க
பெற்றோர்க்கு என்றும் வேண்டுமே வலிமை !

தனித்தன்மை கொண்ட குழந்தைகளின்
தனித்துவத்தை அடையாளம் கண்டு
தனித் திறமைகளை வளர்க்கப்
பயிற்சிகள் பலதையும் கொடுத்து
எழுதப்பேச கதைக்க கற்றுக் கொடுத்தால்
மேதாவிகள் ஆக்கிடலாம் மேதினியில் !

சிறப்புக் குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்த
தடைகளைத் தாண்டி நடைபோட
எதிர்நீச்சலோடு சமூகத்தில் போராட
பெற்றோர்க்கு வேண்டுமே வலிமை !

பாமுக அதிபரின் பாரிய பணியாக
அழகிய மலர்களை அரவணைத்து
அவர்களின் திறமைக்கு களம் கொடுத்து
ஆற்றல்களை ஆளுமைகளை பாமுகத்தில்
அரங்கேற்றி மகிழ்கிறார் வலிமையோடு !

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading