20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவதர்சனி
வியாழன் கவி 1621!
வேண்டும் வலிமை!
உள்ளத்துள் வலிமை உண்டாகில்
உலகை வென்றிட முடியும்
இல்லை என்றே எண்ணத்தை
வளர்த்துவிடின் பொய்க்கும் புலமை!
பிறப்பில் ஏது ஏற்றத்தாழ்வுகள்
பிழைத்திட வேண்டும் வல்லமைகள்
குறைகள் தன்னை நிறைவாய் மாற்ற
திறமை தானே மருந்தாய் ஆகும்!
சாதனை ஏட்டில் பதிந்த மனிதர்
சோதனை பலதைக் கடந்த முனிவர்
வேதனை கண்டு ஒதுங்க வில்லை
வென்றதன் மகிமை காலம் சொல்லும்!
வலிமை வேண்டும் மானிடா-அதை
தெளிந்து வாழப் பழகிக்கொள்
வாழ்க்கை என்னும் ஆழி தன்னில்
வீழ்ந்தும் எதிர் நீச்சல் போட்டு வெல்!
குறையென்று ஒதுக்க வேண்டாம்
குன்றின் மீது ஒளிரச் செய்வோம்
மகுடம் சூட்டி அழகு பார்க்க
மலர்கள் யாவும் வாசனை வீசும்!!
சிவதர்சனி இராகவன்
28/4/2022
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...