சிவதர்சனி

வியாழன் கவி 1624!

உழைப்பின் உன்னதம்!

உழைத்துப் பிழைக்கும் உன்னத மானிடம்
உலகை ஆளும் உயரிய பீடம்
தழைக்கும் பயிரினம் பசுமை தேடும்
தன் நலம் நாடாது பிறருக்கு உதவிடும்!!

வியர்வை சிந்தும் நொடிகள் யாவும்
வீணாய்ப் போவது கிடையாதே
விழிப்பாய் நடக்கும் காலம் இங்கே
விதையாய் முளைக்கும் தருவாய் மாறும்!!

வல்லமை கொண்டு வறுமை விலக்க
வலிகள் தாங்கி உடலைத் தேற்ற
மானிடம் கண்ட மாண்பாம் உழைப்பு
மறந்து வாழ்தல் கீழ்மை காணும்!!

பணமும் பொருளும் ஆட்டிப் படைக்க
அதனின் வழியில் மனதும் ஈர்க்க
புதிய உலகை ஆக்கும் சக்தி
புதையல் போலும் உழைப்பால்
முடியும்!!
சிவதர்சனி இராகவன்
5/5/2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading