பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சக்தி சக்திதாசன்

தீயொன்று தெரிகிறது
தீவொன்று எரிகிறது
ஏனென்று புரியாமல்
ஏதேதோ நடக்கிறது

அரசியல் நாடகத்திலே
அரிசியில்லா நிலையின்று
அவலத்தின் மத்தியிலே
அல்லாடும் சோதரர்கள்

மாறாத மேடையொன்றிலே
மாறிவிட்ட பாத்திரங்கள்
மாற்றமில்லா வாழ்வுதனை
மாற்றிவைக்க யார்வருவார்?

ஐனங்களே நாயகரென்பார்
ஐனநாயக நீரோட்டத்திலே
ஐயமின்றித் தவிக்கின்றார்
ஐனங்களின்று தாய்மண்ணில்

சதுரங்கப் பலகையிலே
சதிராடும் பகடைகளாய்
சிக்கிவிட்ட மக்கள்கூட்டம்
சிறையுடைக்கும் காலமெப்போ?

உடைந்துவிட்ட உறவுகளை
உணர்ந்து நாமொன்றாயிணைந்து
உரமிடுவோம் புதியபாதையினை
உருவாக்கி நடந்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading