மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்!
கவி இலக்கம்-1646

மீளெழுங்காலம்!

அகத்தைத் தொலைத்தவராய்
அன்று தேசம் விட்டோடி
நாடோடிகளாய் இன்னும் இன்னும்
மீளெழுகைக்காய் காத்திருப்பு!!

எல்லைகள் கடந்து இழந்தது பாதி
எஞ்சியிருப்பதைக் காக்க மீதி
எச்சங்களைப் பதியமிட போராடி
மீழெழுங்காலம் வேர்பதிக்க ஓடோடி

கிடைத்ததொரு நிலமதில் வாழ்வு
கிளர்ந்தெழும் நொடிகளின் தேர்வு
ஏக்கங்கள் விரட்டியொரு தீர்வு
எமக்கான விடிவாய்த்தேடியபொழுது

பொறுத்தது போதும் என்றே குரல்
பொங்கி வந்து செவி வீழும் கணம்
வானோடி வழி நெடுக நீராடி
எழுந்திடுவோம் நம் மொழி சூடி!!
சிவதர்சனி இராகவன்
22/6/2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading