பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 28-07-2022
ஆக்கம் – 41
உலகாளும் நட்பே

வாழ்க்கையெனும் வட்டத்தில்
வந்து போகின்றவர்கள் பலருண்டு
உற்றார் உறவுகளுக்கு இணையாக
உற்ற நண்பனும் துணையிருப்பான்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பது போல

காலமிது காலம் கலியுக காலம்
தோழ் கொடுக்கும் தோழர்கள் வாழ்ந்த காலம்
ஓட்டுண்ணி நட்புகளின் நிகழ்காலம்
துரோகத்தால் நட்புகள் வீழும் காலம்
புலம்பெயர் தேசங்களில் புலம்பும் காலம்

தீய நட்பால் கைகளை சுட்டுக்கொண்டவர்கள் பலருண்டு
விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த நட்பும் சிலவுண்டு
கூடா நட்பு கேடா முடியும் சொல்லிவைத்தார் அன்று
சொல்லியும் கேட்பதற்கு எவருமில்லை இன்று

சீரிய பண்பும் வீரிய அன்பும் ஓன்றாகவேண்டும்
நட்பின் இலக்கணம் உலகத்தை ஆளவேண்டும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
25-07-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading