மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 616
அது அப்படியல்ல இப்படி

விடிந்து விட்டது விடிந்து விட்டது என்பார்
வெளுப்பதெல்லாம் விடியவில்லை
முடிந்து விட்டது முடிந்துவிட்டது என்பார்
மொத்தமாக முடியவில்லை
கற்றேன் கற்றேன் என்பார்
கடுகளவும் கூட அறியவில்லை
பெற்றேன் பெற்றேன் என்பார்
பிள்ளைகளைத் தவிர பெறவில்லை

அளிக்கின்றேன் அளிக்கின்றேன் என்பார்
தன்னுடையதை அளிக்கவில்லை
ஒழித்திடுவேன் தீமையை என்பார்
பேய்க்குணம் விடவில்லை
தேடிவிட்டேன் தேடிவிட்டேன் என்பார்
தன்னையே இன்னும் தேடவில்லை
சூடிவிட்டேன் மகுடம் என்பார்
கோட்டைக்குள்ளே நுழையவில்லை

ஆறறிவோடு பிறந்த அதிசயப் பிறப்பாக மனிதன்
தடுமாறி நடந்தாலும் ஆடுகின்றேனென கூறுவான்
பசியாறவில்லையெனினும் அமுதம் உண்டெனென்பதில் பெருமை
பூமிவாசிகள் புகழ்பாடும் வில்லுப்பாட்டை கேட்டாலே இனிமை

ஜெயம்
03-08-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading