தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1666!

மன்னிப்பு !
தவறுகள் செய்யா மாந்தர் இனம்
தடம் பதித்த பூமி உண்டா
தவறுக்கு வருந்திக் கேட்கும்
மன்னிப்பை விட பேறேதும் உண்டா!

உணர்ந்து திருந்தி வாழும்
உயரிய மனங்களைக் கண்டு
உன்னதம் இதுவே என்று -நிதம்
மகிழ்வு கொள்ளுதல் உண்டே!

தண்டித்தல் என்பதை விடவும்
மன்னித்தல் உயர்வின் பண்பே
மீண்டும் செய்யாது திருத்த
வழியாய் அமையும் மருந்தே!

உலக மன்னிப்பு தினமும்
ஆகஷ்ட் ஐந்தில் அமைந்து
அகிலம் விழிக்க வென்றே
ஐ நா ஆக்கியது அன்றே!!
சிவதர்சனி இராகவன்
4/8/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading