திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1666!

மன்னிப்பு !
தவறுகள் செய்யா மாந்தர் இனம்
தடம் பதித்த பூமி உண்டா
தவறுக்கு வருந்திக் கேட்கும்
மன்னிப்பை விட பேறேதும் உண்டா!

உணர்ந்து திருந்தி வாழும்
உயரிய மனங்களைக் கண்டு
உன்னதம் இதுவே என்று -நிதம்
மகிழ்வு கொள்ளுதல் உண்டே!

தண்டித்தல் என்பதை விடவும்
மன்னித்தல் உயர்வின் பண்பே
மீண்டும் செய்யாது திருத்த
வழியாய் அமையும் மருந்தே!

உலக மன்னிப்பு தினமும்
ஆகஷ்ட் ஐந்தில் அமைந்து
அகிலம் விழிக்க வென்றே
ஐ நா ஆக்கியது அன்றே!!
சிவதர்சனி இராகவன்
4/8/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading