அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கவலை….
காயத்தை கத்தரிக்கும்
கணதியை விளைவாக்கும்
மறதியை மளுங்கடிக்கும்
மாயத்தின் தோற்றம்

உபாதையின் உள்ளீடு
உள்ளத்தின் உருக்குலைவு
காட்டாற்று வெள்ளமாய்
கரையற்றுப் பாயும்
கரையானின் புற்றாய்
கவலையே கொல்லும்

முளையிலே வெட்டு
முன்னேற்றும் விளையும்
அறிவாலே ஆளு
அதிகாரம் தணியும்

முயற்சியைத் தூண்டு
முன்னேற்றம் நிகழும்
வருவதை எதிர்கொள்
வழிகளே செப்பும்

கவலைக்கு மருந்து
கடுகதி வாழ்வும்
அயராத உழைப்பும்
அகத்தினை தீட்டும்
அனுதின ஆற்றலும்
முயல்தலே முனைவு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading