சக்தி சக்திதாசன்

தித்திக்கும் சுவை கொண்டு
எத்திக்கும் சிறந்திருக்கும்
முத்திக்கு அப்பாலும் வாழும்
நித்திய மொழி தமிழென்பேன்

மோதி நெஞ்சில் துயரம்
மீறி நிற்கும் வேளைகளில்
கூடி நாலு சொற் கூட்டி கவிதை
பாடி முடித்தால் அமைதியங்கே

எங்கு நான் என்று பிறந்தாலும்
அன்று ஒரு தமிழ்த்தாயில் கருவாக
மீண்டும் உருவாக வேண்டுமென்று
வேண்டி நிற்கும் பொழுதிதுவே

தாய்மொழியின் பெருமையினை நானும்
கண்டு கொண்ட பொழுது தன்னில்
பாதி வாழ்வு முடிந்து போயிற்று என
பாழும் மனது வாடுது இன்று

சிந்தனை எனும் ஊற்றில் ஊறும்
விந்தைகள் நிறைந்த தமிழில்
முந்தைய வாழ்வின் நிகழ்வால்
பிந்தைய அனுபவப் பிதற்றல்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading