மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 194
04/10/2022 செவ்வாய்
“கலை வாணி”
——————
தாமரை மலரில் இருப்பாயே
தாரணி எங்கும் நிறைவாயே
நாவதன் மீதும் உறைவாயே
நாமகள் எனும் பெரும் தாயே

நான்முகன் நாயகி நீயே
நானிலம் ஏற்றிடும் தாயே
வானிலும் உயரிய பூவே
வளர் எழில் பூங்காவே!

ஏட்டிலும் எழுத்திலும் நீயே
எல்லோர் மனதிலும் நீயே
காட்டிடும் அன்பிலும் நீயே
காந்தர்வ அழகியும் நீயே!

முப்போதும் உடை வெண்பருத்தி
மூன்று தேவிகளில் நீ ஒருத்தி
எப்போதும் உனை மனத்திருத்தி
ஏற்பதில் எமக்கோர் மனத்திருப்தி!

உனக்கு மறுபெயர் வாணி
உலகில் நீதான் ராணி
எந்தன் மனதுறை வேணி
ஏந்தினேன் உன்பதம் பேணி!

நன்றி
மதிமகன

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading