” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜேரமனியிலிருந்து

06.12.22
ஆக்கம் 86
மார்கழி
மார்கழி மழை கொட்டியது
மித மிஞ்சி வயல் வரம்பும் முட்டியது
கோடை வெப்பமதில் காய்ந்து
வெடித்த நிலமோ குளிர்ச்சியால்
பாராட்டியது

தை மாதப் பயிருக்கு நல் அறுவடையென
விவசாயி உளம் மகிழ்ந்து
மார்கழிக்கு மாலை போட்டது

புதுவருடம் பிறக்கப் போகிறதென்று
புத்தாடைகள் பல வர்ணமுடன்
பாதையோரக் கடைகளில் தொங்கி
சந்தோஷத்தில் ஊஞ்சல் ஆடியது

கிறிஸ்து பாலன் பிறந்து
நல்வழி காட்டிடு என
மாந்தர் மனமோ வேண்டியது.

Nada Mohan
Author: Nada Mohan