சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1733!

மனித நேயம்

உணர்வோடு உயிர்ப்போடு கலந்திருக்க வேண்டிய பண்பு!

உணர்ந்து மனிதர் காக்க வேண்டிய பண்பாடு பல மனங்களின் கூப்பாடு!

இன மத பேதங்கள் விடுத்து என்றும்
இயல்பிலே வளர்த்திட
வேண்டிய நிகழ்வு!

பசியறிந்து உணவிடலும்
பகை விடுத்து கரம் கொடுத்தலும் பாவச் செயல் விடுத்து வாழ்தலும் இதன் வழி!

அள்ளிக் கொடுப்பவர் சிலர்
கிள்ளிக் கொடுப்பவர் சிலர்
வழி காட்டிச் செல்பவர் சிலர்
வலி மாற்றிச் செல்பவர் சிலர்!

கழிந்த காலங்கள் மீளா இனி இருக்கும் காலம் வீணாகா
பிழைக்க வைக்க வாய்ப்பு வரின்
உழைப்பை உவந்தும் காக்கலாம் மனித நேயம்!
சிவதர்சனி இராகவன்
8/12/2022

Nada Mohan
Author: Nada Mohan