“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

க.குமரன் 3.01.23

சந்தம் சிந்தும்
வாரம் 205. 3,01.23

தை மகளே

தை மகளே
செய்வது தான் யாது?
வினா ஒன்று தொடுத்தால்
விடை என்ன தருவாய்?

வளரும் நாட்களில்
வருவது தான் என்ன?
போர்களங்கள் புண்ணிய
பூமி ஆகுமா!
வாட்டிடும் நோய்கள்
மங்களம் தான் பாடுமா?

இயற்கையின் சீற்றம்
தென்றலாய் மாறுமா?
ஏங்கிடும் ஏக்கங்கள்
எண்ணம் போல் மாறுமா?

கண்ணீர்கள் பன்னீராய்
மாறுமா?
தடைகற்கள்
வெண்பனிபோல உருகுமா?

வாஞ்சை தரும் நாட்கள்
வசந்தத்தை தேடிட
வரவேற்கின்றேன்
உன்னை மகளே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading