முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

pon.tharma

கவிதை இலக்கம் -533
புழுதி வாரி எழும் மண்வாசம் .

சோழகக் காற்றது சுற்றி அடிக்க .
சுமை கொண்ட கிளைகளும் சுழன்றுமே முறிய .
கூடிய கூட்டமோ கூழுண்டு மகிழ .
தேடியே அண்டாவைத் தேர்ந்துமே எடுக்க.

ஆச்சியும் மகளும் ;அடுக்களை உபயம்.
அண்டாவை நிரப்ப ,ஆறு உமல் ,அசைவம் .
துடிக்கிற நண்டுகளைச் ,சுழற்றி ,ஒரு அடிப்பு .
தொங்கிடும் தலைகளை ,நறுக்கி ஒரு வெட்டு .

அவிகின்ற கூழ் ,அது ,அக்கம் ,பக்கம் எல்லாம் ,கம கமப்பு.
அடுத்தவர் வாசலுக்கும் ,அது சென்று ,வரவழைப்பு .
குடிக்கின்ற கும்பலும் ,கூடி நின்று ,பரபரப்பு .
கோலிய ,பலாவிலையால் ,கூழுமோ ,அள்ளிக் குடிப்பு.

அடித்திடும் காற்று ,அதனால் ,அங்கமெல்லாம் ,புழுதி ஒட்டிப்,பிசுபிசுப்பு .
குடித்திடும் கூழ் சுவையை ,மறைத்திடும் ,புழுதி வாரி எழும் மண் வாசம் .
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading