மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

pon.tharma

கவிதை இலக்கம் -533
புழுதி வாரி எழும் மண்வாசம் .

சோழகக் காற்றது சுற்றி அடிக்க .
சுமை கொண்ட கிளைகளும் சுழன்றுமே முறிய .
கூடிய கூட்டமோ கூழுண்டு மகிழ .
தேடியே அண்டாவைத் தேர்ந்துமே எடுக்க.

ஆச்சியும் மகளும் ;அடுக்களை உபயம்.
அண்டாவை நிரப்ப ,ஆறு உமல் ,அசைவம் .
துடிக்கிற நண்டுகளைச் ,சுழற்றி ,ஒரு அடிப்பு .
தொங்கிடும் தலைகளை ,நறுக்கி ஒரு வெட்டு .

அவிகின்ற கூழ் ,அது ,அக்கம் ,பக்கம் எல்லாம் ,கம கமப்பு.
அடுத்தவர் வாசலுக்கும் ,அது சென்று ,வரவழைப்பு .
குடிக்கின்ற கும்பலும் ,கூடி நின்று ,பரபரப்பு .
கோலிய ,பலாவிலையால் ,கூழுமோ ,அள்ளிக் குடிப்பு.

அடித்திடும் காற்று ,அதனால் ,அங்கமெல்லாம் ,புழுதி ஒட்டிப்,பிசுபிசுப்பு .
குடித்திடும் கூழ் சுவையை ,மறைத்திடும் ,புழுதி வாரி எழும் மண் வாசம் .
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading