கீத்தா பரமானந்தம்-மொழி-

மொழி!
முந்தியே வந்த
மூத்தவள் ஆகிச்
சிந்தையின் உணர்வினைச்
சிந்துகின்ற வழியே!
சொந்தமாய் ஏற்றிட்ட
சொத்தாம் முகவரியே
வந்தனை செய்தே
வணங்குகிறேன் நித்தம்

சங்கம் வளர்த்த
சரித்திரம் ஆகிச்
சங்கரனையும் பொருதி
சாற்றினாய் மேன்மை
எங்கணும் நிறைந்தே
ஈரடிக் குறளாய்
பங்கம் அற்ற
பவித்திரம் சொன்னாய்!

முத்தாக இயக்கும்
முத்தமிழ் மன்றே
வித்தக மொழியே
வீறுடை தமிழே!
தக்கவள் என்றே
தாங்கிய செம்மொழி
இத்தரை எங்கும்
இசைக்குதே மேன்மை!

சொல்லிடச் சுவைக்கும்
சுந்தரம் நீயே
வல்லமை தந்தே
வாழ்வெலாம் காப்பாய்!

கீத்தா பரமானந்தன்
27-02-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading