மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தம்-மொழி-

மொழி!
முந்தியே வந்த
மூத்தவள் ஆகிச்
சிந்தையின் உணர்வினைச்
சிந்துகின்ற வழியே!
சொந்தமாய் ஏற்றிட்ட
சொத்தாம் முகவரியே
வந்தனை செய்தே
வணங்குகிறேன் நித்தம்

சங்கம் வளர்த்த
சரித்திரம் ஆகிச்
சங்கரனையும் பொருதி
சாற்றினாய் மேன்மை
எங்கணும் நிறைந்தே
ஈரடிக் குறளாய்
பங்கம் அற்ற
பவித்திரம் சொன்னாய்!

முத்தாக இயக்கும்
முத்தமிழ் மன்றே
வித்தக மொழியே
வீறுடை தமிழே!
தக்கவள் என்றே
தாங்கிய செம்மொழி
இத்தரை எங்கும்
இசைக்குதே மேன்மை!

சொல்லிடச் சுவைக்கும்
சுந்தரம் நீயே
வல்லமை தந்தே
வாழ்வெலாம் காப்பாய்!

கீத்தா பரமானந்தன்
27-02-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading