மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

pon.tharma

வணக்கம் .
இது வியாழன் கவி இலக்கம் -535-28.02.23
நிமிர்வின் சுவடுகள் .
———————————-
நிமிர்வின் சுவடுகள் ,கூற , மறுக்குமா உதடுகள் .

அன்னையும் ,தந்தையும் ,ஆசானும் (எமை )
அகிலத்துக்கு அனுப்பிய ,பரம்பொருளும் .

ஆக்கமும் ,ஊக்கமும் ,எமக்கு அளித்து –
அனுதினம் அவஸ்தைகள் ,சிதறடித்து .

ஏழ்மையும் ,தாழ்மையும் ,மறக்க வைத்தார் .
ஏறிடும் ஏணியாய்த் ,தாமிருந்தார் .

அயர்ந்திடும் போதினில் ,அடித்துறுக்கி .
தொய்ந்திடும் வேளையில் ,காதில் முறுக்கி .

புதைந்திட்ட திறமைகட்கு ,பொடிவைத்து .
துறை எல்லாம் ,தூண்ஆக்கி ,நிற்கவைத்த .

ஒளி காட்டி உயர்த்தி வைத்த ,கண்மணிகள் .(அவை )
கரையில்லா ,வானத்தின் ,மின்மினிகள் .
ஆக்கம்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading