சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1772!

“நிமிர்வின் சுவடுகள்”

ஏல ஏலோ ஐலசா
எலேலேலோ ஐலசா…

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க போகவில்லை ஐலசா
மன தேக்கத்தில
நினைவிருக்கு
மீட்டுவரப் போறமிங்கே!!

மூத்தோரே தெய்வமுங்க
முந்தி வந்து சொன்னோமுங்க
வாழ்ந்து போன சுவடுகளில் வளமிருக்கு அறியுங்க!!

பாட்டன் பூட்டன் காலத்திலே
பாதையெங்கும் விளை நிலமாம்
விதைத்ததெல்லாம் முத்தாச்சு
நம்ம மூச்சினிலே கலந்தாச்சு!!

காத்து நின்ற தெய்வமுங்க
காலம்த ந்த பரிசிவங்க
சேர்த்து வச்சு தந்தாங்க நல்ல
சேதி சொன்ன வள்ளலுங்க!!

வாழ்ந்து போன
தடங்களெல்லாம்
தாழ்ந்திடாம நிமிருதிங்கே
தோத்து போக மாட்டோமுங்க
சந்ததியாய்க் காப்போமுங்க!!
சிவதர்சனி இராகவன்
1/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading