28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 213
07/03/2023 செவ்வாய்
“நாதம்”
———-
கோவில் மணி நாதம்-அது
குடிகளுக்கு என்றும் வேதம்!
பூவில் வண்டின் நாதம்-அது
புரியாத இனிமை கோலம்!
அவன் ஆடிடும் நாதம்-அது
ஆனந்த உச்சத்தின் வேதம்!
இவண் இல்லை பேதம்-என்றும்
இணையிலா நாத கானம்!
கானத்தில் பிறந்த நாதம்-அதில்
காலத்தால் வாராது சேதம்!
மோனத்தில் ஆடும் பாதம்-அது
மோதல் இல்லாத ஞானம்!
நாதஸ்வரம் ஓர் ஞானம்-அதில்
நமக்குள் இல்லை பேதம்!
வேத உச்சாடன நாதம்-அது
விண்வரை சென்று மீளும்!
தந்திகள் தரும் நாதம்-அது
தானாக உயிரை மீட்டும்!
அந்தியில் வீசும் காற்று-அது
ஆன்மாவை வருடும் நாதம்!
இருபக்க அடிதாங்கும் மேளம்-அதன்
இணைவில் இசைந்திடும் நாதம்!
தருவிக்கும் இன்பமுதிர் தாளம்-அது
தந்திடும் இணையிலா நாதம்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...