பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 215
28/03/2023 செவ்வாய்
“நீர்க்குமிழி”
—————
பட்டி நிறை வெள்ளத்திலே
பாவை யென்று வந்தவளே!
எட்டி நின்று பார்க்கையிலே
என் உள்ளம் கவர்ந்தவளே!

குட்டிக் குட்டி குமிழெனவே
குடைபிடித்து வருபளே!
ஒட்டி ஓடும் வெள்ளத்திலே
ஒவ்வொன்றாய் ஒளிர்பவளே!

கண்ணாடி உடல் வாகில்
கட்டழகு கொண்டவளே!
பின்னாடி விரல் பட்டால்
பிடித்தவுயிர் மாய்ப்பவளே!

கைபட்டால் உயிர் மாய்க்கும்
கற்புக்கரசி ஆனவளே!
மெய்பட்டால் துவண்டு விழும்
மேலான குணத்தவளே!

வேறு
———
நீர்க் குமிழே வாழ்வென
நீத்தார் சொல்லிச் செல்ல!
ஊர்க்கிது உபதேச மென
ஊர்க்குருவி ஒன்று சொல்ல!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading