இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 189
முதியோர் வாழ்க்கை

உடலிற்கு தந்த முதுமை
மனதிற்கு இல்லையே அது
அதனால் உற்சாகத்துடன் வாழ
தந்த இறைவனுக்கு நன்றி

மனைவியின் காவலன் இளமையில்
கணவனின் ஊன்றுகோல் முதுமையில்
தாங்கிப் பிடிக்க துணை இருந்தால்
தள்ளாடும் முதுமையும் இளமையே

எந்த உயரினத்துக்கும் உண்டே முதுமை
அதையிட்டு கவலைப்படுவது ஏனோ
மானிடனே வேண்டாம் உன் கவலைகளை
தூர எறிந்து விட்டு போடு வீரநடை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading