நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 189
முதியோர் வாழ்க்கை

உடலிற்கு தந்த முதுமை
மனதிற்கு இல்லையே அது
அதனால் உற்சாகத்துடன் வாழ
தந்த இறைவனுக்கு நன்றி

மனைவியின் காவலன் இளமையில்
கணவனின் ஊன்றுகோல் முதுமையில்
தாங்கிப் பிடிக்க துணை இருந்தால்
தள்ளாடும் முதுமையும் இளமையே

எந்த உயரினத்துக்கும் உண்டே முதுமை
அதையிட்டு கவலைப்படுவது ஏனோ
மானிடனே வேண்டாம் உன் கவலைகளை
தூர எறிந்து விட்டு போடு வீரநடை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan