தர்ஜினி சண்

இன்றும் என் காதில்
கேட்கும் அம்மா குரல்

அம்மாவின் குரலில்
என் பெயரே கானம்

கட்டுண்டு போவேன்
அவர் குரலில் என் பெயர்
அது தயாஆஆஆஆஆ❤️❤️❤️

வயிற்றில் நான் இருக்கும் போதே
அம்மா வைத்த பெயர் தயா….
அப்பா வாழ்ந்த காலம் வரை
அப்பா அம்மாவை அழைத்த
பெயரும் தயா…

பெயர் வைத்த பின்பும்
பெண் பிள்ளை தான் வேணும்…
என் முதல் பிள்ளை
பெண்ணாக வேண்டும்…

அம்மாவின் நட்ஷத்திரத்தில்
அவர் விருப்பம் போலே
அவர் ஆசை நிறைவேற
அவருக்கு மகளானேன்..

கருவறையில் எனை காத்து
கைகளில் ஏந்தியவர்…..
சுற்றுகின்ற பூமியில்
சுமைகள் பல தாங்கி…..
நிற்காமல் சுழல்கிறார்
நாளை இன்னும் உண்டென்று…

கடிகார முட்களை
கதையாக்கும் என் அம்மா
கடவுளுக்கு நிகராவார்
என் கண்களில் நிறைந்திடுவார்…

காலங்கள் கரைந்திட
கோலங்கள் மாறிட
கற்றிட்ட பாடங்களை
மொத்தமுமாய் உணர்ந்திடுவார்…

22.03.2023
18:24
தர்ஜினி சண்🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading